search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வி‌ஷம் குடித்து"

    நெல்லை மாவட்டத்தில் வி‌ஷம் குடித்து 2 தொழிலாளிகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நெல்லை:

    முக்கூடல் அருகே உள்ள பாப்பாக்குடி அடுத்த கீழ பாப்பாக்குடி காந்திநகரை சேர்ந்தவர் செல்வம் (வயது 55). தொழிலாளி. இவர் வி‌ஷம் குடித்த நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து பாப்பாக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சங்கரன்கோவில் அருகே உள்ள வடக்கு ஆலங்குளம் பகுதியை சேர்ந்தவர் கோட்டியப்பன் (70). இவர் வி‌ஷம் குடித்த நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு அவர் இறந்தார். இதுகுறித்து சின்ன கோவிலான்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அரக்கோணத்தில் உடல் நிலை பாதிக்கப்பட்ட மகனுடன் வி‌ஷம் குடித்த தாய் உயிரிழந்தார். அரசு ஆஸ்பத்திரியின் மகனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    அரக்கோணம்:

    அரக்கோணம் டவுன் ரத்தினம் தெருவை சேர்ந்தவர் வள்ளி (வயது 48). கணவரை இழந்தவர். இவருடைய மகன் நாகராஜன் (வயது 28). இவர் தனியார் கம்பெனியில் வேலை செய்தார். அப்போது, கம்பெனியில் ஏற்பட்ட ஒரு விபத்தில் நாகராஜனுக்கு முதுகெலும்பு முறிந்ததுடன், உடல் பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    அவரை குணப்படுத்த அந்த நிறுவனம் ரூ.95 லட்சம் மருத்துவ செலவை ஏற்றது. தீவிர சிகிச்சை அளித்தும் நாகராஜனை குணப்படுத்த முடியவில்லை. இதனால் நாகஜராஜனும், அவர் தாயும் மனமுடைந்தனர். நேற்றிரவு வீட்டில் இருந்த நாகராஜனும், அவரது தாயும் வி‌ஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனர்.

    வி‌ஷம் குடித்ததில் வாயில் 2 பேருக்கும் வாயில் நுரை தள்ளியது. வள்ளி சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். நாகராஜன் மயக்க நிலையில் கிடந்தார். இன்று காலை நீண்ட நேரமாகியும் அவர்கள் வீட்டை விட்டு வெளியே வராததால் அக்கம், பக்கத்தினர் சந்தேகமடைந்து வள்ளி வீட்டிற்கு சென்று பார்த்தனர்.

    அப்போது, வி‌ஷம் குடித்த நிலையில் கிடந்த 2 பேரையும் பார்த்து அதிர்ந்து போயினர். உடனடியாக அவர்களை மீட்டு அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டுச் சென்றனர். அங்கு பரி சோதித்த டாக்டர்கள், வள்ளி ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். நாகராஜன் கவலைக்கிடமாக இருந்தார்.

    இதையடுத்து, மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அரக்கோணம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.


    ×